ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!

836

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்ம் 40வயது ராமஜெயம். இவரது மனைவி ரத்னா. இந்த தம்பதிக்கு 5 வயது ராஜலட்சுமி , 2 வயது தேஜாஸ்ரீ மற்றும் 2 மாத ஆண் குழந்தை என 3 குழந்தைகள்.

அவரது மனைவி ரத்னா மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேரும் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் இருந்தனர். இந்நிலையில், மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக ராமஜெயம் தனது சித்தப்பா மகன் ராஜேசுடன் ஆம்னி காரில் சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர், தனது குழந்தைகள், மனைவியை அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பி இருக்கிறார். இவர்கள் சென்ற ஆம்னி வேன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிந்தது.

சித்தேரி மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கோர விபத்தில் ரத்னா, 2 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 மாத ஆண் குழந்தையும் ராமஜெயமும் காரில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து, காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 மாத ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து 5 பேரின் சடலங்களும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.