கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

787

பிரான்ஸில்..

பிரான்சில் கர்ப்பிணி சிறுமியை கொடூரமாகக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கான விசாரணை இன்று தொடங்குகிறது. பிரான்ஸில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 15 வயது பள்ளி மாணவி 2019-ஆம் ஆண்டு, ஷைனா (Shaina) எனும் 15 வயது மேல்நிலைப் பள்ளி மாணவியை, அப்போது 17 வயது சிறுவனாக இருந்த நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிரான்ஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரான்சில் அதிகரித்து வரும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல்களால் அவர்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலைகளை தூண்டியது.

குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான சிறுவன் ஷைனாவைக் கொன்று அவரது உடலை எரிக்கும் நோக்கத்துடன் பாரிஸின் வடக்கே அமைந்துள்ள க்ரீல் நகரத்தில் உள்ள ஒரு கொட்டகைக்கு இழுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டைச் சுற்றி விசாரணை மையம் கொண்டுள்ளது.

ஆனால், தற்போது 20 வயதைக் கடந்துவிட்ட அவர் தனது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, தான் குற்றமற்றவர் என்று கூறுகிறார். அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சார்பாக விடுதலையை கோருவதாகக் கூறினார்.

ஷைனாவின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நெகர் ஹேரி, நீதியைப் பெறுவதற்கும், உண்மை வெளிச்சத்திற்கு வருவதை உறுதிசெய்வதற்கும் வலியுறுத்தினார்.

ஷைனாவுக்கு நேர்ந்த கொடூரங்கள் மற்றும் சோகமான சூழ்நிலைகள்
2019 அக்டோபரில், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில், ஷைனாவின் எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பிரேத பரிசோதனை தடயவியல் பரிசோதனையில் ஷைனா பல கத்திக் காயங்களுக்கு ஆளாகியிருந்ததும், தீப்பிடித்தபோதும் உயிருடன் இருந்ததும் தெரியவந்தது.

அவர் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள், குடும்ப விருந்துக்குப் பிறகு வெளியே சென்றிருந்தார், அவருடைய கைப்பையில் ஒரு நேர்மறையான கர்ப்ப பரிசோதனை உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்த ஷைனா, புதிதாக கர்ப்பம் தரிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவர் முன்பே ஒருமுறை குற்றம் சட்டப்பட்டவரால் கற்பமானதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல சோகமாக சூழ்நிலைகளை ஷைனா எதிர்கொண்டுள்ளார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் மேலும் சோகத்தை கொடுக்கிறது.