வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை ஆலயத்தில் பறவைக் காவடியில் வந்து மெய்சிலிர்க்க வைத்த பெண்கள்!!

3227

வற்றாப்பளையில்..

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டியின் அருளை பெறுவதற்காக குவிந்து வந்தனர்.

பாற்குடங்கள், ஆட்டக்காவடிகள் , பறவைக்காவடிகள் என நேர்த்திக்கடன்களை அடியவர்கள் நிறைவேற்றிய காட்சி பார்ப்போரை கண்குளிரவைத்தது.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு பெண்களால் எடுக்கப்பட்ட தூக்கு காவடி பலரையும் மெய்சிலிர்க்கவைத்துள்ளது.

உள்நாட்டு போரின் பின்னர் பெண் ஒருவர் தொடர்ச்சியாக வற்றாப்பளை அம்மனுக்கு தூக்கு காவடி எடுதுவரும் நிலையில், நேற்றையதினம் வேறு இரு பெண்களும் பறவைக்காவடி எடுத்துவந்து அன்னைக்கு தமது நேர்த்திக்கடனை செய்திருந்தமை வற்றாப்பளை கண்ணகை அம்மனின் பெருமையினை இன்னும் எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது.