சூடுபிடிக்கும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழப்பு விவகாரம்!!(வீடியோ)

474

SL

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ஆட்டமிழக்க செய்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

5வது ஒருநாள் போட்டியில் இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதின, இதில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே சேனநாயகே ஆட்டமிழக்க செய்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டர் குக் கூறியதாவது, இந்த ஆட்டமிழப்பு மூலம் இலங்கை அணி கட்டுப்பாட்டுக் கோட்டை மீறிவிட்டது. டெஸ்ட் போட்டிகளின் போது இதனால் சற்று சலசலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். இது தவிர்க்க முடியாததே.

இதற்கு பதிலடியாக கிரிக்கெட் ஆட்டம்தான் இருக்கவேண்டும். பேசிய வார்த்தைகள் திறமையான ஆட்டமாக மாறவேண்டும்.

மீண்டும் இதனைச் செய்வேன் என்று இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறுகிறார் என்றால் ஒரு அணித்தலைவராக தன் அணி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அவர் கவனிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறுகையில், அவரது ஓடும் வேகத்தை நிறுத்த என்னதான் செய்வது இதைத் தவிர அதனால்தான் இப்படி ஆட்டமிழக்க செய்ய முடிவெடுத்தோம் என்று கூறியுள்ளார்.

ஜெயவர்தன கூறுகையில், முதல் எச்சரிக்கைக்கு முன்பே இருமுறை அவரை எச்சரித்தோம், பட்லரும், ஜோர்டனும் பந்து வீசும் முன்பாக கிரீஸை விட்டு கொஞ்சம் அதிகமாகவே முன்னேறுகின்றனர் என்று கூறினோம்.

மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்யவே நாங்கள் ஆட்டமிழக்க செய்ய முடிவெடுத்தோம்.

நடுவர்களிடமும் எச்சரித்தோம், ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் அவர்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனவே நாங்கள் சரியான முடிவை எடுக்கத் தள்ளப்பட்டோம் என்று கூறியுள்ளார்.