படுக்கை அறையில் இளம் பெண் கொடூர கொலை.. நடந்த விபரீதம்!!

765

பெங்களூருவில்..

இன்றைய காலக்கட்டத்தின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது என்று கூறலாம்.. திருமணத்துக்கு முன்பே லிவிங் டூகெதர் என்ற வாழ்வியல் முறையில் இளைஞர்- இளம்பெண் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.



கிட்டதட்ட கணவன் – மனைவியாக வாழ்ந்துவிடுகின்றனர். பலர் இந்த வாழ்க்கைக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் சேர்ந்தாலும், பலரின் கதைகள் கொடூரமாக தான் முடிகிறது.

அப்படியொரு நிகழ்வுதான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகான்ஷா என்ற 23 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்பித் ( 27 ) என்பவருடன் அகான்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

முதல் நட்பாக பழகினாலும் அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். ஆனால் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அகான்ஷாவுடன் கடந்த கடந்த 5 ஆம் தேதி ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டி பேசிய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆர்பித் இளம்பெண் அகான்ஷாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் உயிரிழந்த நிலையில் ஆர்பித் அங்கிருந்து தப்பியோடினார்.

சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இளம்பொண் கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையின்போது, இளைஞர் அகான்ஷாவை கொலை செய்த பின்னர், அதை தற்கொலையாக மாற்ற திட்டம்போட்டார். இதற்காக சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்தார்.

இது தோல்வியில் முடிந்தது. இதனால் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அவரது செல்போனை அங்கேயே விட்டு விட்டு சென்றது போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.

இளைஞர் ஆர்ப்த் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்பதால் தனிப்படையினர் அங்கு விரைந்து அவரை தேடி வருகின்றனர். இந்த கொலை பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.