உயரிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளம் விஞ்ஞானி!!

1343

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்காக அரசினால் வழங்கப்படும் Romania விருதிற்கே அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Ministry of Research, Innovation & Digitalization, Romania இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராக கலந்துகொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.