யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர் சமூகம் சீரழிகின்றது.
போதைப் பொருள் மற்றும் மதுபான பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுங்கத் திணைக்களம் இதுபற்றி எவ்வாறு பேசினாலும், நாட்டுக்கள் சட்டவிரோதமாக போதைப் பொருள் கொண்டு வரப்படுவதனை மறுப்பதற்கில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்டங்களிலிருந்து வடக்கிற்கு கொண்டு வரப்படும் கள்ளு வகைகள் சுகாதாரத்திற்கு உகந்தவையல்ல. இவை செயற்கையாகவே தயாரிக்கப்படுகின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜெயலலிதா தூரநோக்குடைய ஓர் தலைவியாவார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் கவனம் செலுத்துகின்றார் என்று தெரிவித்தார்.