இலங்கையின் தனியார் பேரூந்துகளில் காட்டு யானைகளை விரட்டும் ஹோர்ன்கள்!!

310

Horn

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட அதிக ஹோர்ன் ஒலியை எழுப்பும் வாகனங்களை கண்டறியும் சோதனைகளின் போது 9 தனியார் பேரூந்துகள் அதிக ஒலியை எழுப்பும் ஹோர்னை பொருத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 9 பேருந்துகளிலும் சாதாரண டெசிபில் ஒலியை காட்டிலும் காட்டு யானைகளை விரட்டும் ஒலியை ஒத்த ஹோர்ன் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் விசேட கருவிகளை கொண்டு ஹோர்ன் ஒலியை அளவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.