58 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

1003

இந்தியாவில்..

இந்தியாவில் 58 வயதான மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஷேரா படு(வயது 58).

IVF சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா நியூரோஸ்பைன் மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் ஷைஃபாலி தாதிச் துங்கேரியன் அளித்த சிகிச்சையின் மூலமே இது நடந்துள்ளது.

தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.