17 வயது மாணவிக்கு மாரடைப்பு : படியில் ஏறிய போது நேர்ந்த சோகம்!!

1014

இந்தியாவில்..

இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனிஷா காந்தி (17), 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

படிப்பில் படு கெட்டிக்காரியான தனிஷா, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தனிஷா, காலை பள்ளி இடைவேளையின் போது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார்.

படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அசௌகரியமாக உணர்ந்துள்ளார், உடனடியாக அவரது தோழிகள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தினரும் தனிஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மாரடைப்பு காரணமாக தனிஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறவும், நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த போது தனிஷா அசௌகரியமாக உணர்ந்துள்ளார், படியில் ஏறவும் முடியவில்லை.

உடனடியாக அவரது தோழிகள் கூறியதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

தனிஷா அற்புதமான பிரகாசமான மாணவி, மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பம், இதற்காக நீட் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருந்தார். தனிஷாவின் தாய் கோவிட் தொற்றால் உயிரிழந்துவிட்டார், தந்தை இயற்பியல் ஆசிரியர் என தெரிவித்துள்ளார்.