புலத்சிங்களவில்..
புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது முன்னாள் காதலனிடம் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி பெறுவதற்காக சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞருடன் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சிறிது காலத்தின் பின்னர் அந்த உறவை நிறுத்திய இளம்பெண் வேறு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் மீண்டும் காதல் உறவை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் இரு தரப்பு பெற்றோரின் ஆசிர்வாதத்தையும் பெற்று அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த பெண் தனது பழைய காதலனை சந்தித்து தனது திருமணத்திற்கு அனுமதி கோர சென்றுள்ளார். அங்கு அவர் அவருடன் மூன்று நாட்கள் கழித்தார்.
எவ்வாறாயினும், மேலதிக தகவல்களைக் கேட்டபோது, நீண்ட விசாரணையின் பின்னர், பழைய காதலன் மற்றும் புதிய காதலன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, புதிய காதலன் பெண்ணை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததால் சம்பவம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.