யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து நள்ளிரவில் தீக்கிரை!!

2229

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி – கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.