திருப்பூரில்..

குடும்பத் தகராறில் மனைவியின் தலையை அறிவாளால் வெட்டி துண்டித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு மனைவியின் தலையைத் துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு மெயின் ரோடு டிஎம்எஸ் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் 36 வயதான மணிகண்டன். இவர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருப்பூரில் இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 23 வயதான பவித்ரா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.

பவித்ரா மணிகண்டனுக்கு இரண்டாவது மனைவி ஆவார். அதேபோல் பவித்ராவும் மணிகண்டனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பவித்ரா தனது தாயாருடன் அடிக்கடி பேசி பேசி வருவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது இரண்டு பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வாய்ப்பேச்சு போதாது என்று சரமாரியாக அடிதடியில் இறங்கித் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

கோபத்தில் உச்சத்திற்குச் சென்ற மணிகண்டன் வீட்டிலிருந்த அறிவாளால் பவித்ராவின் தலையை வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் மூன்றாவது மாடியில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

அறிவாளால் வெட்டிய போது அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மணிகண்டன் பவித்ராவை கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்கிருந்த மணிகண்டனைப் பிடித்துள்ளனர். காவல்துறையினர் மணிகண்டன் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பவித்ராவின் தலையை ஒரு பூக்கூடைக்குள் வைத்து வெளியே கொண்டு செல்ல மணிகண்டன் திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேசமயம் பவித்ராவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. மேலும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. பவித்ராவின் உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





