கொடுத்த வாக்கை காப்பாற்றிய சிறைக்கைதி!!

437

A12

சுவிஸ் சிறையிலிருந்து தப்பிய பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொலைகாரன், மீண்டும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

38 வயதான குறித்த நபர், கடந்த 2005ம் ஆண்டு விபச்சாரி ஒருவரை 110 தடவைகள் குத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் கொலைக் குற்றத்திற்காக ஜெனிவா சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், குறித்த கொலைகாரன் வெளியில் தனக்கு சில நாட்களுக்கு வேலையிருப்பதாகவும், அதன் பிறகு திரும்பி வந்து விடுவதாகவும் சிறையில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளான்.

இந்நிலையில், தனது வாக்குறுதியைக் காப்பாற்ற கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளான் என ஜெனிவா அதிகாரிகள் கூறியுள்ளனர்.