அமெரிக்காவில் இயற்கை சூழ்ந்த காட்டு பகுதியில் மருத்துவர்கள் உதவி இன்றி பெண்கள் குழந்தை பெற்று கொள்வது குறித்து புதிய தொடர் ஒன்றை படமாக்கியுள்ளனர்.
பார்ன் இன் தி வைல்ட் என்ற இந்த தொடரில் கர்ப்பிணிகள் அடர் வன பகுதியில் தனியாக விடப்படுகின்றனர். அவர்களை சுற்றி இயற்கை சூழல் நிறைந்த பகுதி இருக்கும். ஆனால் அவர்களுக்கு உதவி செய்வதற்கு என மருத்துவர்கள் யாரும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதனால் குழந்தை மற்றும் தாய் பாதிப்பிற்கு ஆளாகும் அபாயம் உள்ளது என கருத்து பரவியது.
எனினும் நிகழ்ச்சியை நடத்தும் அதிகாரியான எலி லெஹ்ரர் கூறுகையில், தாயும், குழந்தையும் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் நாங்கள் ஒரு குழுவாக அவர்களை கண்காணித்து வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுபோன்ற தொடர்களால் ஆபத்தான கலாசாரம் பரவும் அபாயம் உள்ளது என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.