10 வருட கொழுப்பு கரைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட நபர்!!

304

ஸ்லோவாக்கியா நாட்டில் நபர் ஒருவர் தனது முகத்தில் 13 பவுண்ட் எடையுள்ள கட்டியை 10 வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளார்.

ஸ்லோவாக்கியா நாட்டின் ஸ்டீவன் என்பவர் மாட்லங் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் பெரிய கட்டியுடன் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

மாட்லங் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, கொழுப்புகள் கன்னத்திலும், தாடையிலும் தங்கிவிட்டன. இதனால் இவரால் கழுத்தை கூட திருப்ப முடியவில்லை. இதனை அடுத்து மருத்துவர்கள் 5 மணி நேரம் சிகிச்சைக்கு பின் 13 பவுண்ட் எடை கொழுப்பை நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்டீவன் கூறுகையில், எல்லோரும் தன்னை பார்ப்பது தனக்கு சங்கடமாக இருந்ததாகவும், தனது தலையை கூட அசைக்க கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக இவருக்கு சிகிச்சை செய்வதில் மருத்துவ ரீதியாக பிரச்சனை இருந்தது, தற்போது சிகிச்சை செய்துள்ளதுடன், உடல் நலம் ஆரோக்கியமும் அடைந்துள்ளார்.

11 12 13 14