மன்னாரில் இன்று ஏற்பட்ட சோகம்.. சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள்!!

2327

மன்னாரில்..

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது (37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.

குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் படகில் நீர் நிரம்பி நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையிலே இன்று (03) காலை சக மீனவர்கள் காணாமல்போனோரை தேடிய போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மீனவரை தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்டவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.