பிலியந்தலை மடபான பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றிரவு வீட்டிலிருந்து எழுந்த பாரிய சத்தத்தை தொடர்ந்து, வீட்டுக்கு சென்று பார்வையிட்டதாகவும் அதன் போது, பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.