பதுளையில்..

பதுளையில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை கெப்பட்டிபொல பிரதான வீதியில் இன்று முற்பகல் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிற்றூந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





