டோனியை பார்க்க விடாததால் வெடித்த மோதல்!!

241

Dhoni

தனியார் விழாவில் பங்கேற்க வந்த டோனியை, ரசிகர்கள் பார்க்க விடாமல் அவரின் பாதுகாவலர்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, ஏர்செல் நிறுவனத்தின் மஜிக் ரீசார்ஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக கோவை வந்தார். இதற்காக கோவை ரேஸ்கோர்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதனை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டு நின்றனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக அங்கு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தது. விழா முடிந்து விமான நிலையத்திற்கு செல்வதற்காக டோனிக்கு, ஹோட்டல் நுழைவாயிலில் உயர்ரக கார் தயார் நிலையில் இருந்தது.

டோனி காரில் இருப்பதையாவது பார்க்கலாம் என்று, ஏராளமான ஆண், பெண் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களும் காரின் அருகில் சென்றனர்.

அப்போது காரின் 2 புறமும் தொங்கியபடி நின்ற, பாதுகாவலர்கள், காருக்கு மிகவும் அருகில் நின்று கொண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை, காருக்கு வழிவிடுவதற்கு ஒதுக்குவது என்ற பெயரில் தள்ளிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டோனியின் கார் பின் சென்ற பாதுகாவலர்கள் காரை ரசிகர்கள் செல்லவிடாமல் சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் பொலிசார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை சமாதானப்படுத்தினார்கள். பின் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் சிறந்த வீரராக கருதப்படும் டோனியின் இந்த செயல் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.