தமிழகத்தில்..
தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பூசுச்துரை பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் வேலைக்காக போலந்து சென்றுள்ளார். அங்கு அனியா என்ற போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அருண் பிரசாத் பேசி பழகி உள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், இன்று இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மந்திரங்கள் முழங்க போலந்து பெண் அனியாவை புதுக்கோட்டை இளைஞர் அருண் பிரசாத் கரம்பிடித்தார்.