முல்லைத்தீவில்..
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலிநகரில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் (10-07-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மல்லாவி பொலிஸார் – குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில், சந்தேக நபர்கள் 4 பேரும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் (11-07-2023) கைது செய்திருந்தனர்.
அவர்களில் மூவர் நேற்றும், ஒருவர் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த கொலைக்கு இடியன் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்