மும்பையில்..

குழந்தைகளின் கண்ணுக்கு முன்னே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தாயை ராட்சத அலை ஒன்று கடலுக்கு இழுத்து சென்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிலர் புகைப்பட மோகத்தில் நாம் எத்தகைய ஆபத்தின் நுனியில் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் தங்கள் வாழ்கையோடு அவர்களே விளையாடுகின்றனர்.

அந்தவகையில் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட்-டில் உள்ள கடல் பகுதியில் தம்பதி ஒருவர் தங்களின் குழந்தைகளின் முன்னிலையில் ஆபத்தான முறையில் புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த கற்களை நோக்கி வந்த ராட்சத அலை ஒன்று குழந்தையின் தாயை கடலுக்கு இழுத்து சென்றது, இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில் பெரிய அலைகள் வருவதை பார்த்து தம்பதியின் குழந்தை கத்தும் சத்தங்களை கேட்க முடிகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணைய தளத்தில் வேகமாக பரவிய நிலையில், உயிருக்கு மிகவும் ஆபத்தான வகையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை குறித்து நெட்டிசன்கள் தீவிர விவாதத்தை மேற்கொண்டனர்.
Woman swept away by wave at Bandra Bandstand in #Mumbai #DNAVideos
For more videos, click here https://t.co/6ddeGFqM3o pic.twitter.com/fAPnU9MYb5
— DNA (@dna) July 15, 2023





