நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

755

தேவகோட்டையில்..

தேவகோட்டையில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் செவிலியர் மனைவியை வெட்டிக் படுகொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி சூர்யா (30).



இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. சூரியா தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த நான்கு வருடங்களாக பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை விட்டு சூரியா பிரிந்து வந்து தேவகோட்டை சரஸ்வதி ஸாசகசாலை தெருவில் முனியய்யா கோவிலில் அருகில் வாடகை வீட்டில் தனியாக மகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சூர்யாவை வழிமறித்த கணவர் பிரபாகரன் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து, மனைவி நடத்தையில் மீது சந்தேகம் உள்ளதால் கொலை செய்ததாக கூறி பிரபாகரன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உடனடியாக பிரபாகரனை கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.