வவுனியா நகரசபை தற்காலிக சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

346

வவுனியா நகர சபையின் தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐவர் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக பணிபுரியும் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிய போதிலும் தாம் தொடர்ந்தும் தற்காலிக ஊழியர்களாகவே கவனிக்கப்படுவதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தமது போராட்டாம் மேலும் தீவிரமடையும் எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

11 12 13