விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கூலித் தொழிலாளி!!

355

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் கூலி தொழிலாளி ஒருவர் வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்று பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. வீட்டின் மூத்த மகளான இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.



பாரதி, அவரது ஊரிலுள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பாரதியால் படிக்க முடியவில்லை. பின்னர், அவரது பெற்றோர் தாய் மாமாவான சிவபிரசாத்திற்கு பாரதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தனது குடும்பத்தின் நிலை காரணமாக பாரதி கூலி வேலைக்கு சென்றுள்ளார். இருந்தாலும், பாரதிக்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பேராசிரியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும், கல்வியின் மூலம் தான் உயர முடியும் என அவர் நினைத்திருக்கிறார்.

விவசாயப் பண்ணையில் தினசரி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்த பாரதி தனது பட்டப்படிப்பைப் பெற ஆறு வருடங்கள் உழைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். பின்பு, அனந்தபூரில் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.

வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதியை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் (Phd) பட்டப் படிப்பில் சேர ஊக்கப்படுத்தினர். இதனால், அவர் கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்து தற்போது வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்றிருக்கிறார்.

இதற்கு, பாரதியின் கணவரும் உறுதுணையாக இருந்துள்ளார்.பெண் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , என் தாத்தா என்னைப் படிக்கச் சொன்னார் என்று பாரதி கூறியுள்ளார்.