ஆர்ப்பரித்த அருவியை ரசித்த இளைஞர்… நொடியில் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ!!

906

கர்நாடகாவில்..

ஆர்ப்பரித்து கொட்டிய அருவியை ரசித்துப் பார்த்த 23 வயது இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிசினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.



இதனை 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு பார்த்துக் கொண்டிருப்பதை அருகில் மற்றொருவர் காணொளி எடுத்துள்ளார்.

இளைஞர் ஒரு கட்டத்தில் தனது கால்களை மெதுவாக அசைத்த போது, வழுக்கி கரைபுரண்டு ஓடும் அருவியில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.