இலங்கையில் தாய் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம் : பெண்ணின் நகை அடகு கடையில்!!

1448

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் தொழில்நுட்பத்தின் ஊடாக பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனவே இது தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சந்தேக நபரை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் அண்மையில் இளம் தாயும் ,கை குழந்தையும் படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.