வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு : பல்வேறு சேவைகளும் ஸ்தம்பிதம்!!

2259

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (28.07.2023) முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்புக்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள மனிதபுதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும் அதற்கு, சர்வதேசநிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தால் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன்,மொத்த வியாபாரசந்தையின் செயற்பாடுகள்ளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை முன்னெடுத்திருந்தது.

குறிப்பாக நகருக்கு வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், சேவைகளை பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.

பாடசாலைகள் வழமைபோல திறக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டிருந்தது