நாகையில்..
நாகை மாவட்டம் திருக்குவளை அய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி. இவர் ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி .
ஷாலினி அதே பகுதியில் வசித்து வரும் சின்னதுரையும் காதலித்துவந்தனர். இது குறித்து ஷாலினியின் அக்கா நந்தினி ஷாலினி மற்றும் சின்னதுரையை கண்டித்துள்ளார். தங்கையுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் சின்னதுரைக்கும், நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சின்னதுரை நந்தினியை தகாத வார்த்தையால் திட்டினார். உறவினரோடு சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நந்தினி திருக்குவளை காவல்நிலையத்தில் ஜூலை 22ம் தேதிபுகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி முதல் ஷாலினியை காணவில்லை .
இதனையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். நள்ளிரவு வீரையன் வீட்டிற்கு பின்புறம் சிறுநீர்கழிக்க சென்றபோது ஷாலினி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த வீரையன் ஷாலினியின் உடலை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
ஷாலினியின் அக்கா நந்தினி அளித்த புகாரின்பேரில் காதலன் சின்னதுரை, சகோதரர் கண்ணன், தந்தை ராஜேந்திரன், தாய் பாப்பாய் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.