கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமியொருவர் மாயம் : அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!!

1161

கனடா..

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 வயதுடைய 5 அடி 4 அங்குலம் உயரமுடைய மெல்லிய தேகமுடைய காணாமல்போன சிறுமி, கடைசியாக கறுப்பு நிற ரி சேட் மற்றும் கறுப்பு நிற பான்ட் அணிந்திருந்தார் எனவும் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-4300, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), or at www.222tips.com.அறிவிக்குமாறு ரொறன்ரோ பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளார்.