
பிரான்சில் நாடக கலைஞர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்சில் யூலை 4ம் திகதி நடைபெறவிருக்கும் திரையரங்கு கலாச்சார விழாவிற்கு இந்த நாடக குழுவிர் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அந்நாட்டு காலாச்சார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் கலைஞர்களோ, இதில் கலந்துகொள்வதற்கு தங்களுக்கு ஊதியம் வேண்டுமாறு கூறியுள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த அமைச்சர், இந்நாட்டில் உங்களுக்கு அரசாங்கத்தால் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் வேலையற்றோருக்கு வழங்கப்படும் ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆதலால் இந்நிகழ்ச்சிக்கு ஊதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனைத் எதிர்த்து நாடக கலைஞர்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





