அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் மாயம்!!

830

திஷாந்தன்..

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை வம்சாவளியை சேர்ந்த 18 வயதுடைய திஷாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.



இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.