கராச்சி சர்வதேச விமான நிலையம் தாக்குதல் குறித்து பரபரப்புத் தகவல்கள்!!

628

Pak

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயத்தில் உள்ளது.

கடந்த 8ம் திகதி கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலால் சுமார் 27 பயணிகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தலீபான் பயங்கராவாத அமைப்பு பெறுப்பேற்றுள்ளது.

இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த விமான நிலையத்தின் அருகே உள்ள இராணுவ முகாமில் தீவிராவதிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் தலீபான்கள் தாக்குதல் சம்பவங்கள் விமான நிலையத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் விமான சேவை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு காரணங்களால் ஏற்கெனவே பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள், கராச்சியில் தங்கள் விமான சேவையை நிறுத்தியிருந்தன.

தற்போது உள்ள பயங்கரவாத தாக்குதலால், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திகொண்டுள்ளன. கராச்சியில் விமான சேவையை தொடர்வது குறித்து அந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வாரத்தில் கராச்சிக்கு வரும் 2 விமானங்களை ஹொங்கொங்கில் உள்ள எங்களது தலைமை அலுவலகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்றும் விமான சேவையை மீண்டும் தொடர்வது குறித்து இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் விமான நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.