வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் பாலமோட்டை அ.த.க.பாடசாலைக்கு பாதுகாப்பு வலைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

290

கடந்த மாதம் இளைஞர் கழகத்தினர் பாலமோட்டை பகுதிக்கு சென்றிருந்த வேளை, அதிபர் அவர்கள் தமது பாடசாலையின் கூரைப்பகுதியில் உள்ள இடைவெளியினால் வௌவால்கள் ,குரங்குகள் என்பன வகுப்பறையினுள் புகுந்து நாசமாக்குவதனால், மாணவர்கள் தமது பொருட்கள் மற்றும் ஆக்கத்திறன் விருத்திகளை மேற்கொள்ள சிரமமாக இருப்பதனால், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு எமது இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வலைகள் வாங்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனடிப்படையில் நேற்றைய தினம்(11.06) இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் ஆசிரியர் திரு சுவேந்திரன் அவர்களிடம் பாதுகாப்பு வலைகள் கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், கழக இணைப்பாளர் காண்டீபன், தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ், பொருளாளர் நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பெரும் இடையூறாக இருந்த இந்த தொல்லைகள் அகல்வதால், தாங்கள் தங்கள் கல்வி மற்றும் வகுப்பறை அழகுபடுத்தலில் கூடிய கவனம் செலுத்தி, சிறார்களின் கல்வி வளர்ச்சியில் அனைவரும் பங்களித்து தமிழர்கள் நாம் கல்வியால் எழுவோம் என தெரிவித்தார்.

1 2 3