சாக்லேட்..
கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதேவேளை மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சாக்லேட்டில் மனித விரல் ஒன்று இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சொக்லட் ஒன்றில் மனித எச்சங்கள் : அதிர்ச்சியில் மக்கள்!!
இலங்கையில்..
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்படவுள்ளது.
மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.