விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

1115

திருகோணமலையில்..

திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும்,

லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் கந்தளாய் – லீலாரத்ன மாவத்தை சேர்ந்த 23 வயதான ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரை இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய போது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து சேவை பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.