தென்னிலங்கையில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆசிரியை!!

2557

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடசாலை மாணவர்களை வெளியில் சுற்றுலா அழைத்துசெல்வது வழமை.பல்வேறு விடயங்களை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்கள் அழைத்து செல்லப்படுகின்றன.



அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி அழைத்துசெல்கின்றார்.

கோழிகள் தங்கள் குஞ்சுகளை சிறகுள்ள மறைத்து காப்பது போல மழை வெய்யில் காலங்களில் பொதுவாக அம்மாக்களே இவ்வாறு பிள்ளைகளை அழைது செல்வதனை நாம் கண்டிருக்கின்றோம். இந்நிலையில் ஆசியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.