யாழில்..
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தாய் பேசவில்லை என்ற காரணத்தினால் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளா சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளம் குடும்பஸ்தரும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் கடந்த சில நாட்கள் பேசவில்லை.
இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், நேற்றையதினம் (15-08-2023) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 41 வயதான தங்கராசா சதீஷ் என தெரியவந்துள்ளது.இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.