கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!!

1239

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சிறுவன் ஒருவர் சர்ப்பம் தீண்டி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(15.08.2023) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் பாலகனே உயிரிழந்துள்ளார்.



சர்ப்பம் தீண்டியவுடன், சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.