திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை .இதனால் மக்கள் மிகுந்த கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில் நீரோடையும் குறுக்கே இருப்பதால் அதில் இறங்கியே உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என தற்போதுள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் மற்றும் இதற்கு முன் இருந்த பல ஊராட்சி தலைவர்களிடமும் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் அழகம்மாள் நேற்று மரணம் அடைந்தார். அழகம்மாளை அடக்கம் செய்வதற்காக, சடலத்தை எடுத்துச் சென்றனர். அப்போது அவரது. உறவினர்கள் சந்தனவர்தினி ஆற்றுப் படுகையில் உள்ள குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் அழகம்மாளின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
விரைவில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலையை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.