வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் நேற்று(17.08.2023) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலைமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் லோகேஸ்வரன் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒழுக்காற்றுக் குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தனர்.