உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் வசித்து வருபவர் பிரேம் ராஜ் சிங்.இவருக்கு வயது 47. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் எப்போதும் தனது பேண்ட் பாக்கெட்டில் ஐபோன் வைத்திருப்பது வாடிக்கையான செயல். திடீரென அவரது போன் சூடாவதை அவர் உணர்ந்தார்.
மேலும் சில நிமிடங்கள் கழித்து போனிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அவர் பையில் இருந்து எடுக்கும் முன் ஐபோன் பயங்கர ஒலியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் பிரேம்ராஜ் சிங்கின் இடது தொடை மற்றும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிங் ” திடீரென என் பாக்கெட்டிலிருந்த ஐபோன் சூடானது. உடனே வெளியே எடுத்த போது ஒரு பெரிய ஒலியுடன் வெடித்து விட்டது. ஐபோன் 2 துண்டுகளாக உடைந்துவிட்டது” எனக் கூறினார். இச்சம்பவம் அலிகாரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.