வெளிநாட்டு அழகியை கரம்பிடித்த தமிழ் இளைஞன்.. பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!!

514

தமிழகத்தில்..

தமிழகத்தின் கடலூரை சேர்ந்த இளைஞனுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் எம்.பி.ஏ பட்டதாரி.



இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இத்திருமண வைபத்தில் பிலிப்பைன்ஸ், கடலூர், சிங்கப்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரில் இருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பத்மநாபன் எம்பிஏ முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது.

இது நாளைடைவில் காதலாக மாறியது, பின் இருவரும் ஒரு வருடமாக காதலித்தது வந்து நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பத்மநாபன் குவாங்கோவின் பெற்றோர்களிடம் தங்கள் காதலை சொல்லி முழு சம்மதம் வாங்கிய பின்பு திருமணத்தை தமிழ் கலாச்சார இந்து முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் நடத்தினர்.

இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.