கமலின் படத்தில் பார்வதியால் ஏற்பட்ட சிக்கல்!!

237

Kamal

கமலின் உத்தம வில்லன் படத்தில் பார்வதி பெயரில் இரண்டு நாயகிகள் நடிப்பதால் குழப்பம் ஏற்பட்டது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் மரியான், பூ போன்ற படங்களில் நடித்த பார்வதி மேனன் கமல் ஜோடியாக நடிக்கிறார்.

அதேபோல் பார்வதி நாயர் என்ற மற்றொரு மல்லுவுட் நடிகையும் இதில் நடிக்கிறார். இதனால் படப்பிடிப்பில் குழப்பம் ஏற்பட்டது. இது பற்றி பார்வதி நாயர் கூறும்போது, கமலின் மகனாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அவரைவிட வயதில் மூத்த நடிகை தேவைப்பட்டார்.

மூத்தவர் என்றாலும் அழகான ஒரு முகம் தேவை என்று பட குழுவினர் தேடிக்கொண்டிருந்தனர். எனது மனேஜர் என்னிடம் கேட்காமலேயே என் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார்.

அதைப்பார்த்ததும் கமலுக்கு பிடித்துவிடவே என்னை ஆடிஷனுக்கு அழைத்து பயிற்சிக்காக நடிக்க வைத்தனர். இதில் தேர்வானேன். எனக்கு கமல் உதவியாக இருந்தார். இதே படத்தில் பார்வதி மேனனும் நடிக்கிறார்.

இருவருக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் இருக்கும்போது குழப்பம் ஏற்படுவது உண்டு. பார்வதி மேனன் என்று அழைப்பதற்கு பதில் பார்வதி நாயர் என்று கூப்பிடுவார்கள்.

ஸ்பாட்டுக்கு போனால் என்னை அழைக்கவில்லை என்று தெரியவரும். இந்த குழப்பத்திலிருந்து எப்படி மீள்வது என்பதற்கு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் புதுவழி கண்டுபிடித்தார். நாயர் என்று அழைத்தால் நான் செல்வேன். மேனன் என்று அழைத்தால் அந்த பார்வதி செல்வார். அதன்பிறகே குழப்பம் தீர்ந்தது என்றார்.