செல்வச் சன்னதியான் ஆலய தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்!!

1034

ஈழத்தின்..

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை (31) காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

சன்னதியானின் அருளைபெற இன்றைறைய நாள் தேர்த் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.