கனடா செல்ல ஆசைப்பட்டு மட்டக்களப்பு நபரிடம் ஏமாந்த யாழ் யுவதி!!

1012

மட்டக்களப்பில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக வந்த விளம்பரத்தை நம்பி யாழ் யுவதி ஒருவர் காத்தான்குடி நபரிடம் 10 இலட்ச ரூபாய் பறிகொடுத்த சம்பவம் ஒன்று பதிப்வாகியுள்ளது.இந்நிலையில் குறித்த பெண்ணிடன் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த காத்தான்குடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரை விளக்கமறியலில் வைக்க யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், சமூக வலைத்தளத்தில் , கனடா அனுப்பி வைக்க முடியும் என வந்த விளம்பரம் ஒன்றினை நம்பி, விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது அழைப்பை எடுத்தவர் , கனடா அனுப்பி வைப்பதாக பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார். அதனை நம்பிய யுவதி கனடா செல்லும் ஆசையில் தொலைபேசியில் தன்னுடன் கதைத்தவருக்கு 10 இலட்ச ரூபாய் முற்பணமாக வழங்கியுள்ளார்.அதன் பின்னர் நீண்ட காலமாக தனது கனடா பயண ஒழுங்குகள் எதுவும் நடைபெறாததால், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் யுவதி முறைப்பாடு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த , பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 57 வயதுடைய நபரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை , காத்தான்குடியில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.அதன்பின்னர் நேற்று (145)வியாழக்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.