தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு : வெளியான தகவல்!!

1199

கொழும்பில்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிலரால் தாக்கப்பட்டதில் சுமார் 05 மாதங்களாக சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். காதல் உறவின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹகுரன்கெத பல்லே, போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த இந்துனில் சாமர காரியப்பெரும என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரிய மொழி கற்கை நெறியை மேற்கொள்வதற்காக கொழுப்பிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், கொரிய மொழி பாடத்தின் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்த இந்துனில், குழுவில் உள்ள 44 வயதுடைய பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவு ஆகியவற்றை பரிமாறிக்கொண்டுள்ளார்.

ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு இருந்திருப்பது அவருக்கு தெரியாது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள், கொரிய மொழியின் இறுதிப் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த இந்துனிலை கொழும்பு கோட்டையில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

காரில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு சபுகஸ்கந்தவுக்கு அழைத்துச் சென்று இறுதியாக கொலன்னாவ மயானத்திற்கு அருகில் இந்துனிலின் ஆடைகளை களைந்து மீண்டும் வீதியில் வைத்து அவரை தாக்கும் காணொளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில், பிரதேசவாசிகளின் தலையீட்டினால் அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.படுகாயமடைந்து 05 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் உயிரிழந்துள்ளார்.