நோர்வேயில் உள்ள உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக இலங்கைத் தமிழர்!!

647

நோர்வேயில்..

டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு (10-01- 2022) முதல் இக் கழகத்தின் அகாடமி வளரிச்சியின் தலைவராக பணியாற்றி வந்த சண் அவர்கள், அதற்க்கு முன் 10 ஆண்டுகளுக்கு மேலாக டென்மார்கின் உயர்தர வரிசையில் (Super Liga) விளையாடும் உதைப் பந்தாட்டக் கழகமான AGF விளையாட்டுக் கழகத்தில் U10 தொடக்கம் U19 வரையான இளையோர் அணி பயிற்றுனராக கடமையாற்றியிருந்தார்.

நேற்று (10.09.2023) தனது கடமையை ஏற்றுள்ள சண் அவர்கள், ஐரோப்பா நாடுகளின் முதல் தரவரிசையில் விளையாடும் கழகங்களில், முதலாவது ஈழத் தமிழர் பயிற்றுனராவர்.

இவர் UEFA Elite Youth A license சான்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளகா AGF கழகத்தில் இளையோர் வளர்ச்சி பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.