பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு : மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!!

482

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.

சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif, 41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool, 29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik, 28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிசார் தேடி வந்த நிலையில், அவர்கள் புதன்கிழமை பிரித்தானியா திரும்பினார்கள்.

இங்கிலாந்திலுள்ள Gatwick விமான நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்த பொலிசார், அவர்கள் மூவரும் விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் மூவரும் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இன்று அதிகாலை, ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகிய மூவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை ஒன்றின் சாவுக்குக் காரணமாக இருந்தது அல்லது சாவை அனுமதித்தது என்னும் குற்றச்சாட்டும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும், இன்று Guildford மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.